இன்று நடைபெற இருந்த பா.ஜ.க போராட்டங்கள் ரத்து - அண்ணாமலை அறிவிப்பு!

 
Annamalai

தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க போராட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 
 
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து இன்று சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். 

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க போராட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.