சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடு.. - முற்றுப்புள்ளி வைக்க வேல்முருகன் கோரிக்கை..

 
வேல்முருகன்

சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  வேல்முருகன்  தெரிவித்துள்ளார்.

madras university

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்றவர்களையும், ராமானுஜம், எஸ்.ஆர்.சீனிவாச வரதன், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம், இத்தகைய போற்றுதலுக்கும், பெருமிதத்திற்கும்,175 ஆண்டு பாரம்பரியத்துக்குரிய, சென்னையின் வரலாற்று அடையாளமாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடு.. - முற்றுப்புள்ளி வைக்க வேல்முருகன் கோரிக்கை..

சாதிய பாகுபாடுகளைக் கையாள்வதற்காக பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள தீர்வு இக்குழுவிற்கு உரிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால், பாதிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள், பணியாளர்கள், யாரிடம் புகார் அளிப்பது என்பது குறித்து திணறி வருகின்றனர்.போற்றுதலுக்குரிய சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய வன்கொடுமை புகார்களுக்கு ஆளாவதை இனியும் அனுமதிக்க கூடாது. சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் சாதி பாகுபாட்டிற்கு விரைவில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.