‘’இந்த நபருக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்’’

 
na

இந்த நபருக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று  சிவசங்கர் பாபா வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் நாராயணன் திருப்பதி.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு  பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாகவும் கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

si

இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  மனு இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என வாதிடப்பட்டது.  காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார் தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமென வாதிட்டார். 

இதையடுத்து,  சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை  விரிவான இறுதி விசாரணைக்காக நவம்பர் 29ம் தேதி பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

இதுகுறித்து தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,   ‘’சிறப்பு! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.  இறுதியில் தர்மமே வெல்லும். இந்த நபருக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்’’என்கிறார்.