இந்த 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

 
ஹ்

கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.   இதனால் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.   இன்றைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

ர்ர்

 இன்று முதல் ஐந்தாம் தேதி வரைக்கும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறது.   இன்றைக்கு தஞ்சாவூர் ,நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ,புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ,தென்காசி ,திண்டுக்கல் ,தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட் ஆகிய 17 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 நாளை தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ,தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ,நீலகிரி கோவை ,நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.