டெண்டர் முறைகேடு : இபிஎஸ் மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை - ஹைகோர்ட் அதிரடி..

 
ep


நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி  மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி,   நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கியதில் ரூ. 4,8200 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.   குறிப்பாக அவர் தனது சம்பந்திகளுக்கு டென்டரை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது.   இது தொடர்பாக அப்போதே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  லஞ்ச ஒழிப்புத்துறையிஇடம் புகார் கொடுத்தார்.  ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை எந்த புகார் எடுக்கவில்லை.  இதனையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால்  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  கடந்த 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.  

eps

 இதனை இதனை எதிர்த்து  எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக  அண்மையில் திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.  தாங்களும் சிபிஐ விசாரணை கோரவில்லை என்றும், காவல்துறையே  விசாரணை நடத்தலாம் என்றும் வாதிட்டது.  இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணையை ரத்து செய்து,  லஞ்ச ஒழிப்புத்துறையை விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தது.  அத்துடன் சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர். எஸ். பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கடந்த அதிமுக ஆட்சியில் சாலை டெண்டர் வழங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும்,   அதனை ஓட்டியே இந்த வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன்  தற்போதுள்ள திமுக அரசு  நடவடிக்கை எடுக்கும் என்பதால் அந்த வழக்கை தாங்கள் திரும்ப பெற இருப்பதாக வாதிட்டார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாங்கள் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்தார்.

Madras Court

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா,  இந்த வழக்கை பொறுத்த அளவில்  தற்போது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை என்பது விஜிலென்ஸ் ஆணையரிடம்  உள்ளதாகவும் , அவர் மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பார் என்றும்,  அந்த நடவடிக்கை குறித்து தாங்கள்  உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும்  சுட்டிக் காட்டினார்.  அதற்கு எடப்பாடி தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்யும் வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என  தடை விதிக்க வேண்டும் என்றும்,  தற்போதுள்ள நிலையை நீடிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.  ஆனால் அதற்கு அரசு ஜின்னா   கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் விஜிலென்ஸ் ஆணையர்  முடிவெடுக்க  எந்த தடையும் விதிக்காமல்  வழக்கு  விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.