டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

 
tn

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

tn

வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் அலங்கார ஊர்திகளின் மாதிரி அனுப்பி வைக்குமாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்த மாதிரிகளை கடந்த செப்  30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.  அலங்கார ஊர்தியின் மாதிரி படங்கள் மற்றும் 3டி அனிமேஷன் படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்ட நிலையில் அனுப்பி வைக்கப்படும்.  இந்த அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் ஏழு கட்டங்களாக ஆய்வு செய்த பின்னர் ஊர்வலத்தில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் இறுதி செய்யப்படும் என கூறப்பட்டது
 

tn

இந்நிலையில் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 கருத்துக்களை தமிழக அரசு வழங்கியிருந்தது.7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியில் தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அலங்கார  ஊர்தி  தேர்வு செய்யப்படவில்லை.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அலங்கார உறுதி காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.