அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை!!

 
rain

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

rain

சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர் ,பெரம்பலூர் ,நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

rain

நாளை கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ,நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர் ,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் 16 ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ,திண்டுக்கல், ஈரோடு ,சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.