சொத்து வரி - டிசம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

 
c

 சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது சென்னை மாநகராட்சி.   இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   அதாவது வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரைக்கும் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. 

 சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இதுகுறித்து வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் ,  சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் ஐந்து சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது .

க்

2022-23 நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் 1. 10. 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

சொத்து வரி சீராய்வின்படி உயர்த்தப்பட்டிருக்கும் சொத்து வரியில் செலுத்தாதவர்கள் வரி இல்லாமல் செலுத்துவதற்கு 15. 11. 2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது . இதன்படி இதுவரைக்கும் செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் டிசம்பர் 15ஆம் தேதி வரை செலுத்தி கொள்ளலாம் . இரண்டு சதவிகித தனி வட்டியினை தவிர்க்க இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.