வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் - பிரதமர் மோடி புகழாரம்

 
modi

வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

சிவகங்கையை ஆண்ட வீர மங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் வீரப்பெண்மணி ஆவார்.  இவர் 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணி ஆவார். இவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்நிலையில், வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் வெளியிட்டுள்ள தமிழ் பதிவில்,  "வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்". இவ்வாறு பிரதமர் தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.