#JUSTIN மேலும் 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு!!

 
tn

அதிமுகவில் இருந்து மேலும் 44 பேரை நீக்கி ஓபிஎஸ் இரண்டாவது பட்டியலை வெளியிட்டார்.

ops

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணங்களை ஃபேக்ஸ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் அனுப்பி வைத்தார். நேற்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கி நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஓபிஎஸ் நீக்கினார். 

tn
இந்நிலையில் மேலும் 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக தற்போது ஓபிஎஸ் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி ஜெயராமன்,  சி.விஜயபாஸ்கர் .பெஞ்சமின். கே.சி. வீரமணி , மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார் . நேற்று 18 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் ,இரண்டாவது நாளாக நிர்வாகிகளை நீக்கி ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

tn

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  கழகப் பொருளாளருமான ஓ. பன்னீர்செல்வம் என குறிப்பிட்டு வெளியாகி உள்ள அறிக்கையில் , கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் ,கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு , மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் , கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழகமும் அவப்பெயரும்  உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 44 பேரை குறிப்பிட்டு கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.