தமிழ்நாடு என்று சொல்வதில் ஆளுநருக்கு என்ன கஷ்டம்?- முத்தரசன்

 
mutharasan

ஒரத்தநாடு, பாப்பான் நாடு, ஒக்கட்நாடு, உள்ளிட்ட ஊர்களின் பெயர்களையும் மாற்றுவதா? என தமிழக ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல அதிமுக...' -முத்தரசன் விமர்சனம் |  nakkheeran

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தற்போதைய மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக செயல்படுகிறது. தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதுவரை நிரந்தரம் செய்யப்படாத நிலையில் ஒன்றிய அரசை கண்டித்து  ஜனவரி 24 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. ஆளுநரின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் உண்மையை பேச வேண்டும். ஆளுநருக்கும் முதல்வருக்கும் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. இது மாநில பிரச்சினை.

முதல் கூட்டத்தில் ஆளுநர் பேசுவது சபை மரபு. தமிழக அரசு கொடுப்பதை படித்துவிட்டு செல்வதுதான் ஆளுநரின் வேலை. ஆளுநர் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அறிக்கையை அச்சிடவே முடியும். முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவது தவறு. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்கவில்லை அவர் பொறுப்பேற்றது தமிழ்நாடு மாநில ஆளுநராகதான். ஆளுநர் ரவி வேண்டுமென்றே விஷமம் செய்கிறார். ஒரு மாநிலத்தின் பெயர் வைப்பதற்கு ஒருவர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு உருவாக கம்யூனிஸ்ட் கட்சி புபேஷ்குப்தா, ராமமூர்த்தி, அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரின் பங்கு உள்ளது. தமிழ்நாடு என்று சொல்வதில் ஆளுநருக்கு என்ன கஷ்டம்? தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடு உள்ளது, பாப்பான் நாடு, ஒக்கட்நாடு, என நாடு என முடியும் பல ஊர்கள் உள்ளன. அவற்றை என்ன செய்வது? தமிழகத்தில் கலகம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் ஆளுநரின் முயற்சி நடக்காது” என்று கூறினார்.