நாளை விருதுகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
stalin


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தமிழ்த்துறை விருதுகளை வழங்க  இருக்கிறார்.  

தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும்  2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்துறை விருதுகளை நாளை முதலமைச்சர் வழங்க இருக்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை நடைபெறும் விழாவில் விருதுகளை வழங்க இருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.  திராவிட கழக துணை தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.  மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.ரா.வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட இருக்கிறது.  

தமிழக அரசு

திராவிட  இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு,  பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட உள்ளது.  கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரு.வி.க விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும் வழங்கப்பட இருக்கிறது. எஸ்.டி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருதும், முனைவர் மதிவாணனுக்கு தேவநேயப்பாவணர் விருதும்,  பெருந்தலைவர் காமராஜர் விருதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் நாளை வழங்க இருக்கிறார் முதல்வர்.   2023 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கப்பட இருக்கிறது. 2022 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கு வழங்கப்பட உள்ளது.