#Breaking : 10% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் - அதிமுக பங்கேற்காது என அறிவிப்பு..

 
அதிமுக எடப்பாடி பழனிசானி ( இபிஎஸ் )


பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான  10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக  நாளை நடைபெறவுள்ள  அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது.  

பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர்சாதி   வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம்  கடந்த 7ம் தேது  தீர்ப்பு வழங்கியது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,  தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு,  திமுக எம்.பி.,  வில்சன் ,  தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அதன் பின்னர் நவ.12( நாளை) அனைதுக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலின்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  10% இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.. இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்  போடுவதாக கூறி  அதிமுக புறக்கணிப்பதாக கூறியுள்ளது..