பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் சோதனை- மொத்தம் 45 பேர் கைது

 
சோதனை

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தியா முழுவதும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா'வின் 100+ நிர்வாகிகள் கைது - 'மெகா'  சோதனையில் நடந்தது என்ன? | National Level Raid in PFI Office - hindutamil.in

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அமலாக்க துறையுடன் இணைந்து 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை மேற்கொண்டது. குறிப்பாக கேரளா ,தமிழ்நாடு ,கர்நாடகா ,ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ,அசாம் மத்திய பிரதேஷ், உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது. இந்த சோதனையானது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்புடைய ஐந்து வழக்குகள் சம்பந்தமாக நடத்தப்பட்டது.  விசாரணை மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதும் தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. ஆயுதப் பயிற்சி கொடுத்து தீவிரவாத கும்பலில் ஆட்கள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது .

இந்த நிர்வாகிகள் மையங்களை உருவாக்கி வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளித்தது மற்றும் இரண்டு பிரிவினருக்கு இடையே மத அடிப்படையில் மோதலை உருவாக்கியது தெரிய வந்தது. அதிகப்படியான குற்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் உறுப்பினர்கள் மீதும் வன்முறை தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கூர்மையான ஆயுதங்கள் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் 45 பேரை இந்த வழக்குகளில் கைது செய்துள்ளனர். அதில் 19 பேர் கேரளாவிலும், 11 பேர் தமிழ்நாட்டிலும், ஏழு பேர் கர்நாடகாவிலும் ,நான்கு பேர் ஆந்திராவிலும், இரண்டு பேர் ராஜஸ்தானிலும், ஒருவர் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.