செஸ் ஒலிம்பியாட் - 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!!

 
govt

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி  சென்னை உள்ளிட்ட 4  மாவட்டங்களுக்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tn

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு வரும் 28ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அந்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் குறிப்பில் கேட்டுள்ளார்.

tn

இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான 28 ம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆக.27 ம் தேதி (நான்காவது சனிக்கிழமை) சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.