நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு!

 
ttn

நாகை மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அக்டோபர்  13ஆம் தேதிநாகப்பட்டினம் பகுதியில்  இரண்டு விசைப் படகுகளின் மூலம்  நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில்,  யாழ்ப்பாணத்திலுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

fish

கடந்த  ஒருமாதமாக மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருந்த நிலையில், 12ஆம் தேதி மீண்டும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது  வருகின்ற 915ஆம் தேதி வரை) இன்று வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

fish

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 23 மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எல்லை தாண்டி மீன் பிடித்த வழக்கில் 23 மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.