’14 மாவட்டங்களில்’ 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

’14 மாவட்டங்களில்’ 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு ,நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர் ,திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

’14 மாவட்டங்களில்’ 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

’14 மாவட்டங்களில்’ 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். இன்று முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை குமரிக்கடல் ,தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், தென் மேற்கு வங்க கடல், கேரளா ,லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.