சத்தியமே ஜெயம்! ஓபிஎஸ் மகனின் உருக்கமான பதிவு

 
ஜெயபிரதீப்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கட்சியிலிருந்து நீக்கம்

இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து , யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ , அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும் போது , என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது .

2001 - ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன் . எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் புரட்சித்தலைவர் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு , காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை , கழக சொந்தங்கள் உணரும் வரை , இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம் !!” எனக் குறிப்பிட்டுள்ளார்.