கொரோனா உறுதி: பீனிக்ஸ் மாலில் தனிமைப்படுத்தப்பட்ட 2 ஊழியர்கள்!
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நெல்லை, கோவை முதலிடத்திலும், சென்னை ஈரோடு மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது . நேற்று ஒரேநாளில் 110 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நெல்லை, கோவை முதலிடத்திலும், சென்னை ஈரோடு மாவட்டங்கள் 2ஆம் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இரண்டு ஊழியர்கள் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாலில் உள்ள தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் 10 முதல் 17ம் தேதிக்குள் அந்தக்கடைக்குச் சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.