என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது!

 

என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது!

தமிழ்நாடு அரசு புதிதாக உருவாக்கிய தகைசால் விருது முதலாவதாக என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது.

என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது!

தகைசால் தமிழர் விருதிற்கு முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்திட ஒரு குழுவை அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது!

இவ்விருதுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாணவர் தலைவராகவும், சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், பணியாற்றியதுடன் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும், பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதிற்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது!

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யாவிற்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.