“தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

 

“தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை” : முதல்வர் பழனிசாமி  அறிவிப்பு!

ஜனவரி 28-ல் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

“தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை” : முதல்வர் பழனிசாமி  அறிவிப்பு!

இந்நிலையில் இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தைப்பூசத்தை ஒட்டி ஜனவரி 28ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இலங்கை மொரீசியஸ் போல தைப்பூச விழாவிற்கும் தமிழக மக்கள் பொது விடுமுறை தர கோரியதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை” : முதல்வர் பழனிசாமி  அறிவிப்பு!

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் கடவுள் முருகப்பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்த விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ,மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

“தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை” : முதல்வர் பழனிசாமி  அறிவிப்பு!

பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.