ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்!!

 

ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்!!

சென்னையில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.

ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்!!

சென்னை திருவான்மியூர் ஈசிஆர் சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை ஒன்று உள்ளது. இக்கடையிலிருந்து நேற்றிரவு கரும்புகை வெளியேறியது. இதை தொடர்ந்து கடைக்குள் தீ மளமளவென பரவ தொடங்கியது. இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்!!

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் வெளியேறிய கரும்புகையினால் அப்பகுதியை சேர்ந்த பெண் மற்றும் குழந்தை ஒன்று மூச்சுத்திணறி மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.