இங்கிலாந்துடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிப்பு!

 

இங்கிலாந்துடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் போட்டிக்கான 19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்டிக், ரிஷாப் பந்த் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாடியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப், ஷார்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிப்பு!

உள்ளூர் மற்றும் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாடியா ஆகியோர் இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த இருபது ஓவர் தொடரில் தேர்வு செய்யப்பட்டும் காயத்தினால் வெளியேறிய தமிழகத்தின் வரும் சக்கரவர்த்தி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக காயத்தில் இருந்த இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் காயத்திலிருந்து குணம் அடைந்ததால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் இருபது ஒரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த தொடரில் சரியாக செயல்படாத மனிஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.