TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்!

 

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்!

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டுள்ளது.

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்!

தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பது கட்டாயம்.

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்!

ஆகவே, 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பது தான் அனைவருக்கும் நியாயமான தீர்வாக அமையும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது .