நிர்கதியாய் நின்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த தாய் : 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்!

 

நிர்கதியாய் நின்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த தாய் : 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலன் நகரில் உள்ள தனது தாய் சகாயராணி வீட்டுக்கு தனது 4 குழந்தைகளுடன் வந்துள்ளார். சகாயராணி தனது கணவர் அப்துல் காசரை பிரிந்து பாக்கியராஜ் என்பவருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

நிர்கதியாய் நின்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த தாய் : 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்!

இதையடுத்து சில நாட்கள் கழித்து எஸ்தர் பேபி மாயமானதாக தாய் சகாயராணி வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளா. ஆனால் இந்த புகார் மீதான விசாரணை கடந்த 6 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் எஸ்தர் பேபியின் தந்தை சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேவியர் அருண் திருப்பூரில் தனது வீட்டுக்கு வந்த பிறகு தான் தனது மகள் மாயமானதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சேவியர் அருணை போலீஸ் காவலில் எடுத்த போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தியபோது எஸ்தர் பேபியை கொன்று அவரின் வீட்டிலேயே புதைத்த சம்பவம் அம்பலமானது.

நிர்கதியாய் நின்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த தாய் : 6 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பகீர் தகவல்!

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் நிர்கதியாய் வந்த எஸ்தர் பேபியை அவரது தாய் தனது கள்ளக்காதலன் பாக்கியராஜின் ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதற்கு எஸ்தர் பேபி உடன்படாததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் எஸ்தர் பேபி தனது தாயை குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தொடர்ந்து குறை கூறி வந்துள்ளார். இதனால் சகாயராணி ஆத்திரத்தில் தனது மகளை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 2014 ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்த சகோதரர் சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் உதவியுடன் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் அவரின் சடலத்தை வீட்டினுள் புதைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட எஸ்தர் பேபியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்ததில் அவரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கில் சேவியர் அருண் சகாயராணி மற்றும் பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.