திருமுடிவாக்கம் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

 

திருமுடிவாக்கம் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருமுடிவாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அனைக்க தீயணைப்பு வீரர்கள் நெடு நேரமாக போராடினார்கள்.

திருமுடிவாக்கம் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

குன்றத்தூர் அடுத்த திருமுடிவக்கம், சிப்காட் பகுதியில் குரோம்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த கிடங்கிலிருந்து திடீரென புகை அதிக அளவில் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமுடிவாக்கம் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தகவலறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிடங்கில் முழுவதும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் கரும்புகைகள் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்பியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிகளவில் குடோன்கள் செயல்பட்டு வருவதால் அடிக்கடி தீ விபத்துகளும், கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருமுடிவாக்கம் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தீ விபத்து காரணமாக இந்த பகுதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல மின் கம்பங்களில் இருந்த மின்சார வயர்களும் கருகியது.