சிவகாசியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

 

சிவகாசியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

சிவகாசி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே ஜவுளிக்கடை ஒன்று இருக்கிறது. அந்த கடையில் இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல பணிக்கு திரும்பினர். இந்த நிலையில், ஜவுளிக்கடை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கொழுந்து விட்டு எரிந்த தீ, ஜவுளிக்கடை முழுவதுமாக பரவியதால் உள்ளே இருந்து பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாகியுள்ளன.

சிவகாசியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

இதனிடையே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் தீ விபத்தில், உயிர் சேதம் ஏதும் நிகழ்ந்திருக்கிறதா? என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.