தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

 

தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

திருப்பூர்

பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூல பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் நேற்று ஆலை செயல்பட தொடங்கிய நிலையில, ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஆலையில் இருந்த ஒரு இயந்திரத்தில் தீப் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தொட்டியில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

அதற்குள்ளாக தீ மற்ற பகுதிகளிக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள், நூல் கண்டுகள் உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து ஆலை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.