ஆம்பூர் காவல் நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!

 

ஆம்பூர் காவல் நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள கிராமிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பழனி. அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணி புரிபவர் சேது. இந்த நிலையில், இன்று உதவி ஆய்வாளர் பழனிக்கு சொந்தமான 9 எம்எம் கைத்துப்பாக்கியை, சேது சர்பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆம்பூர் காவல் நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!

அப்போது, சேதுவின் கை தவறுதலாக டிரிகரை அழுத்தியது. இதனால் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற குண்டு எதிரே இருந்த சுவரை துளைத்துச் சென்றது. இந்த சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுக்கள் என 10-க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். காவல் நிலையத்தில் துப்பாக்கி வெடித்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.