தென்காசி மாவட்ட கொரோனா கட்டுப்பாடு அறை மூடல்!
Jun 17, 2020, 19:04 IST1592400878000
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 2,174பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் இப்படியே நீடித்தால் ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் சுழற்சி முறையில் 50% ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாடு அறை ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாடு அறை மூடப்பட்டது.