கோயில்களை திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை- தமிழக அரசு

 

கோயில்களை திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை- தமிழக அரசு

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் தேவஸ்தானம் வாரியத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

கோயில்களை திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை- தமிழக அரசு

இந்நிலையில் நாளை முதல் வழிபாட்டுத் தலங்களையும் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் உணவகங்கள் திறக்கப்படும் மேலும் நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்படாது என சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.