கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி படுகொலை… கோவில் அர்ச்சகர் வெறிச்செயல்…

 

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி படுகொலை… கோவில் அர்ச்சகர் வெறிச்செயல்…

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கள்ளக் காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கொலை செய்த, கோவில் அர்ச்சகர் போலீசில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சென்னபசப்பா (46). இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவுரம்மா(41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே, கவுரம்மாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு நபருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சென்னபசப்பா கண்டித்தும், அவர் உறவை கைவிட வில்லை.

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி படுகொலை… கோவில் அர்ச்சகர் வெறிச்செயல்…

இதனால் ஆத்திரமடைந்த சென்னபசப்பா, அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதனையடுத்து, வேப்பனஹள்ளி அடுத்த கே.என்.போடூரில் உள்ள பசவேஸ்வரர் கோவிலுக்கு செல்வதாக கூறி மனைவி கவுரம்மாவை அழைத்துச் சென்ற சென்னபசப்பா, அங்கே அவரை கழுத்தை நெறித்து படுகொலை செய்தார். தொடர்ந்து, ஓசூர் நகர காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

இதுகுறித்து, சென்னபசப்பா அளித்த தகவலின் பேரில், ஓசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சென்னபசப்பாவை கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.