கோயில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் கைது

 

கோயில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் கைது

தென்காசி

தென்காசி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் சாலையில் கோவில் திருவிழாவின்போது இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் விசிலடித்து, நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

கோயில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் கைது

மேலும், இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பரை அவதூறாக பேசி, தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆறுமுகம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் கனகராஜன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, ஆறுமுகத்துடன் தகராறில் ஈடுபட்ட அய்யாபுரத்தை சேர்ந்த சரவணராஜா (21), மைலப்பபுரத்தை சேர்ந்த நவநீத பாண்டியன் (27), முருகன் (20), மீனாட்சிபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து (22) மற்றும் செட்டியூரை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகிய கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.