‘சுட்டெரிக்கும் வெயில்’..அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

‘சுட்டெரிக்கும் வெயில்’..அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்க கடலில் மிகக்கடும் புயலாக மாயிருந்த ஆம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள், ஒடிசா அதிக பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்து ஒடிசாவின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே போல மேற்கு வங்கத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், தமிழக கடலோர பகுதிகளில் இருந்த அனைத்து ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்று விட்டதால், வறண்ட வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

‘சுட்டெரிக்கும் வெயில்’..அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்நிலையில், ஆம்பன் புயல் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள், மாலத்தீவுகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.