ஆந்திராவில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது செருப்பை எறிந்த நபர்…

 

ஆந்திராவில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது செருப்பை எறிந்த நபர்…

ஆந்திராவில் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சியில் அம்மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் மீது அந்த விவாதத்தில் பங்கேற்ற மற்றொரு நபர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் முன்னணி செய்தி சேனல் ஒரு நேரடி விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்றும் ஒரு தலைப்பில் விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அந்த விவாத நிகழ்ச்சியில் அம்மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக பேசினர்.

ஆந்திராவில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது செருப்பை எறிந்த நபர்…
கோலிகாபுடி சீனிவாச ராவ்

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு பிரபலமான அமராவதி பரிராக்ஷனா சமிதி கூட்டு நடவடிக்கை குழுவின் உறுப்பினர் கோலிகாபுடி சீனிவாச ராவ் கோபத்தில் திடீரென தனது செருப்பை கழற்றி விஷ்ணு வர்தன் ரெட்டி மீது வீசினார். தெலுங்கு தேச கட்சிக்கும் சீனிவாச ராவுக்கும் தொடர்பு இருப்பதாக விஷ்ணு வர்தன் ரெட்டி கூறியதால் அவர் மீது சீனிவாச ராவ் செருப்பை வீசினார்.

ஆந்திராவில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது செருப்பை எறிந்த நபர்…
தெலுங்கு தேசம்

விஷ்ணு வர்தன் ரெட்டி மீது சீனிவாச ராவ் செருப்பு வீசிய வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களது கட்சி பொதுச்செயலாளர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் சுனில் தியோதர் டிவிட்டரில், ஆந்திர பா.ஜ.க. தலைவர் வி ரெட்டி மீது தெலுங்கு தேசம் குண்டர்கள் நடததிய செருப்பு தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். நீங்கள் பணம் கொடுத்து முட்டாள்களை அனுப்புவதன் மூலம் இத்தகைய குறைந்த மட்ட அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இத்தகைய மோசமான அரசியலை செய்வதன் மூலம் பெரிய தெலுங்கு கலாச்சாரத்தை அழிப்பதில் வெட்கப்படுங்கள் என்று பதிவு செய்து இருந்தார். மேலும் செருப்பு சம்பவ வீடியோவையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.