நடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு காரணம் முன்னாள் காதலர்களா? : போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

 

நடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு  காரணம் முன்னாள் காதலர்களா?  : போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

தெலுங்கு சீரியல்களின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ராவனி(26), கடந்த 8ம் தேதி அன்று ஐதராபாத் மதுரா நகரில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஸ்ராவனியின் திடீர் தற்கொலை ஆந்திரா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஸ்ராவனியின் தற்கொலைக்கு காரணம் மூன்று முன்னாள் காதலர்கள்தான் என்று போலீசில் புகார் அளித்தார்கள் ஸ்ராவனியின் பெற்றோர்.

நடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு  காரணம் முன்னாள் காதலர்களா?  : போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

டிக்டாக் பிரபலம் காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் ரெட்டி அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி வந்ததாகவும், அதனால் ஸ்ராவனி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார்கள். டிக்டாக் மூலமாக ஸ்ராவனியிடம் பழக்கம் உண்டாகி அதுவே காதலாக மாறியது. இருவரும் தனிமையில் இருந்த சமயத்தில் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதை சமூக வலைத்தளக்களில் போட்டுவிடுவதாக சொல்லி, ஸ்ராவனியிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். ஸ்ராவனியும் பயந்துகொண்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் மிரட்டல் அதிகரிக்கவே மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை முடிவுக்கு போய்விட்டாள் என்று போலீசாரிடம் கொடுத்த புகார் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது.

நடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு  காரணம் முன்னாள் காதலர்களா?  : போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

ஆனால், ’’நானும் ஸ்ராவனியும் காதலித்தது உண்மைதான். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டோம். அதன்பின்னர் எங்களிடையே எந்த தொடர்பும் இல்லை. ஆனால், கடந்த 7ம் தேதி ஸ்ராவனி எனக்கு ஒரு ஆடியோ அனுப்பினார். அதில், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், பெற்றொரும், சாய் என்பவரும்தான் தற்கொலைக்கு காரணம் என்று கூறியிருந்தார்’’என்று சொல்லி அதிரைவைத்தார் தேவராஜ் ரெட்டி.

2015ம் ஆண்டு சாய் ரெட்டியை காதலித்து வந்துள்ளார் ஸ்ராவனி. திருமணம் ஆசையில் சாய் ரெட்டி ஸ்ராவனியின் பெற்றோருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். ஆனாலும் இந்த காதல் முறிந்துவிட்டது. பின்னர் 2017ம் ஆண்டில் டிக்டாக் மூலம் தேவராஜ் ரெட்டியோடு பழக்கமாகி அது காதலானது. அந்த காதலும் முறிந்தது.

நடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு  காரணம் முன்னாள் காதலர்களா?  : போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், காதலிப்பதாகவும் ஆசை வார்த்த கூறியதால் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாருடன் கடந்த ஆண்டிலிருந்து காதல் கொண்டிருக்கிறார் ஸ்ராவனி. ஆனால், அசோக்குமார் ரெட்டி ஏமாற்றியதால் அந்த காதலும் முறிந்துவிட்டது என்று போலீஸ் விசாரணயில் தெரியவந்துள்ளது.

நடிகை ஸ்ராவனி தற்கொலைக்கு  காரணம் முன்னாள் காதலர்களா?  : போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

சாய்ரெட்டி, தேவராஜ் ரெட்டி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரனையை தொடர்ந்திருக்கிறார்கள். ஸ்ராவனி பெற்றோரிடமும் துருவித்துருவி விசாரனை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில், தலைமறைவான அசோக்குமார் ரெட்டியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.