தெலங்கானா முதல்வருக்கு கொரோனா! குணமடைய தமிழிசை வாழ்த்து

 

தெலங்கானா முதல்வருக்கு கொரோனா! குணமடைய தமிழிசை வாழ்த்து

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா வேகமாக பரவிவரும் சூழலில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ள.

தெலங்கானா முதல்வருக்கு கொரோனா! குணமடைய தமிழிசை வாழ்த்து

இந்நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர் ராவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர், பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், மருத்துவரின் அறிவுரைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.