தெலங்கானாவில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி, மூவர் உயிரிழப்பு

 

தெலங்கானாவில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி, மூவர் உயிரிழப்பு

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில், ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கள் பகுதியில் இன்று காலை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஓன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, அருகில் இருந்து உணவகத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பூமன்னா மற்றும் உணவகத்தில் இருந்த சின்ன ராஜன்னா மற்றும் பூதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெலங்கானாவில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி, மூவர் உயிரிழப்பு

மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிஜாமாபாத் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.