பட்டாசு வெடிக்கக் கூடாது: தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு!

 

பட்டாசு வெடிக்கக் கூடாது: தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பட்டாசு வெடிக்கக் கூடாது: தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் ஆரவாரத்துடன் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் மற்றும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளன. தமிழகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

பட்டாசு வெடிக்கக் கூடாது: தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் பேரில், இந்த அறிவிப்பை தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது.