அடங்காத மகன் -அட்வைஸ் செய்த பெற்றோர் -அடுத்து அவர்களுக்கு நேர்ந்த விபரீதம் .

 

அடங்காத மகன் -அட்வைஸ் செய்த பெற்றோர் -அடுத்து அவர்களுக்கு நேர்ந்த விபரீதம் .

பெற்ற தாய் ,தந்தையின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற 14 வயது மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் 42 வயதான அனுமந்தராயா என்பவரும் அவரது 34 வயதான மனைவி ஹொன்னம்மாவும் வேலை செய்தார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் அந்த அலுவலகத்திலேயே உள்ள வீட்டில் தங்களது மகன்களுடன் வசித்து வந்தனர்.

அடங்காத மகன் -அட்வைஸ் செய்த பெற்றோர் -அடுத்து அவர்களுக்கு நேர்ந்த விபரீதம் .


அந்த தம்பதிகளின் 14 வயதான மகன் அனுமந்தராயா பெற்றோரின் பேச்சை கேட்காமல் ஊர் சுற்றி உல்லாசமாக திரிந்துள்ளார் . இதனால் கோவப்பட்ட அந்த தந்தை அனுமந்தராயா கடந்த 6-ந் தேதி தன்னுடைய மகனை திட்டி திருந்துமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் திருந்தாமல் தந்தை மீது ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தனது தந்தை மீது கல்லைப்போட்டுகொன்றார் , அப்போது அதை பார்த்து தடுக்க வந்த தாய் மீதும் அந்த கல்லைப்போட்டு கொலை செய்தார்
பின்னர் அனுமந்தராயாவும், ஹொன்னம்மாவும் தலை நசுங்கியபடி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து பீனியா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் அவர்கள் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு இந்த பெற்றோர் கொலை வழக்கில், அவர்களது 14 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீஸ் விசாரணைக்கு பின்பு சிறார் சிறையில் அந்த சிறுவன் அடைக்கப்பட்டான்.
போலீஸ் விசாரணையில் அந்த சிறுவன் முதலில் தந்தையை மட்டுமே கொலை செய்ய திட்டமிட்டதும், தாய் தடுத்ததால் அவரையும் தீர்த்து கட்டியதாக போலீஸிடம் வாக்கு மூலம் கொடுத்தார் .

அடங்காத மகன் -அட்வைஸ் செய்த பெற்றோர் -அடுத்து அவர்களுக்கு நேர்ந்த விபரீதம் .