முகம் பார்க்காத இன்ஸ்டாகிராம் காதல் : பிளாக் செய்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

 

முகம் பார்க்காத இன்ஸ்டாகிராம் காதல் : பிளாக் செய்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சேர்ந்த ஆனந்தகுமார். இவர் தனியார் வங்கிகளில் ஏ.டிஎம்.களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்துள்ளார். இதனிடையே திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் கைலாஷ்நகர் காந்திநகரில் உள்ள தனது மாமா செந்தில்குமார் வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியுள்ளார்.

முகம் பார்க்காத இன்ஸ்டாகிராம் காதல் : பிளாக் செய்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

இதையடுத்து பொழுபோக்கிற்காக ஆனந்த குமார் பொழுதுபோக்காக இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத பெண் பெயரிலான ஐடி உடன் பேசிப் பழகியுள்ளார். இந்த பழக்கம் காதலாகியுள்ளது. இதையடுத்து அந்த ஐடியில் இருந்து பேசியவர் ஆனந்தகுமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும் ஆனந்தை பிளாக் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்த குமார் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வருத்தபட அவர்கள் ஆனந்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

முகம் பார்க்காத இன்ஸ்டாகிராம் காதல் : பிளாக் செய்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

இதை தொடர்ந்து ஆனந்த குமார் நேற்று உறவினர் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முகம் பார்க்காத இன்ஸ்டாகிராம் காதல் : பிளாக் செய்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

உண்மையில் இன்ஸ்டாகிராமில் ஆனந்துடன் பேசியது பெண் தானா? என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.