“டேய் நீ ஓசிலதான குடிக்க வந்தே?-பார்ட்டியில் நண்பர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் சுட்டு கொலை .

 

“டேய் நீ ஓசிலதான குடிக்க வந்தே?-பார்ட்டியில் நண்பர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் சுட்டு கொலை .

இந்த ஊரடங்கு நேரத்திலும் மூன்று வாலிபர்கள் ஒன்று சேர்ந்து சரக்கு பார்ட்டி வைத்ததில் ஏற்பட்ட தகராறில் ஒரு டீனேஜ் சிறுவன் துப்பாக்கியால் தன்னுடைய நண்பரை சுட்டு கொன்றார் .

டெல்லியின் வடமேற்கு பகுதியில் ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் மூன்று டீனேஜ் நண்பர்கள் திங்கள் கிழமை இரவு ஒரு சரக்கு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த பார்ட்டிக்கு மூவரும் சரிசமமாக பணம் கொடுத்து குடிக்க வேண்டும் என்பது அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டனர் .

“டேய் நீ ஓசிலதான குடிக்க வந்தே?-பார்ட்டியில் நண்பர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் சுட்டு கொலை .
பிறகு மூவரும் சரக்கு வாங்கி வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் பண தகராறு வந்தது .அப்போது அவர்களில் 17 வயது டீனேஜ் பையனை ஒருவர் “டேய் நீ ஏன்டா காசுகொடுக்காம ஓசியில் குடிக்கிறே? ஓசி குடி” என்று கேவலமாக திட்டியுள்ளார் .அதற்கு அந்த சிறுவன் “நான் ஒன்னும் ஓசிக் குடி இல்ல, ,நானும் காசு கொடுத்துதான் குடிக்கிறேன்” என்று கூற ,பிறகு அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியது .

“டேய் நீ ஓசிலதான குடிக்க வந்தே?-பார்ட்டியில் நண்பர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் சுட்டு கொலை .
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த 17வயது டீனேஜ் சிறுவன் தன்னுடைய பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து ,அவரோடு சண்டை போட்ட இன்னொரு நபரின் மார்பில் சுட்டார் .அந்த சிறுவன் சுட்டதில் படுகாயமடைந்த அந்த வாலிபரை மற்றவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றார் .ஆனால் அங்கு டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் அந்த வாலிபர் இறந்தார் .
பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட அந்த சிறுவனை கைது செய்தனர் .