கலசப்பாக்கத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை!

 

கலசப்பாக்கத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் டாஸ்மாக் கடை அருகேயுள்ள காப்புகாட்டிற்கு, இன்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கால்நடை மேய்ச்சலுக்கு சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கலசப்பாக்கத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை!

சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அரவிந்த் மற்றும் ஏஎஸ்பி அசோக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிப்பது தெரியவந்துள்ளது.

இதனைடுத்து, இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.