நடந்து வந்த பெண் -தொடர்ந்து வந்த வாலிபர்கள் -வீட்டுக்கு வந்த பெண் என்ன செஞ்சார் தெரியுமா ?

 

நடந்து வந்த பெண் -தொடர்ந்து வந்த வாலிபர்கள் -வீட்டுக்கு வந்த பெண் என்ன செஞ்சார் தெரியுமா ?


பள்ளிக்கு போன பெண்ணை வழி மறித்து கிண்டல் செய்த வாலிபர்களால் , அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்

நடந்து வந்த பெண் -தொடர்ந்து வந்த வாலிபர்கள் -வீட்டுக்கு வந்த பெண் என்ன செஞ்சார் தெரியுமா ?


உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த 16 வயது பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார் .அவர் பள்ளிக்கு போகும் போதும் வரும்போதும் நான்கு வாலிபர்கள் அந்த பெண்ணை பின் தொடந்து வந்து அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்தனர் .அவர் இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறினார் .அவர் அந்த வாலிபர்களை கண்டிப்பதாக கூறினார் .
அதன் பிறகும் அந்த ரோமியோக்களின் பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டேயிருந்தது .அதனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த பெண் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கையெடுத்தால்தான் ஸ்கூலுக்கு போவேன் என்று கூறினார் .அதனால் அந்த சிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த வாலிபர்கள் மீது புகார் கொடுக்க போனார் .அந்த நேரத்தில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் .அதனால் அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு கொண்டார் .பின்னர் வீட்டிற்கு வந்த அந்த சிறுமியின் சகோதரர்கள் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .அவரை பரிசோதித்த டாக்ட்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர் .பின்னர் அந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .அதன் பிறகு அவரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அந்த வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கையெடுக்க தேடி வருகின்றனர்