திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை… காதல் தோல்வியால் விபரீத முடிவு!

 

திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை… காதல் தோல்வியால் விபரீத முடிவு!

நெல்லை

சேரன்மகாதேவி அருகே திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (21). இவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மணிமேகலையை, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பருக்கு கடந்த 24-ஆம் தேதி திருமணம் செய்து வைத்து உள்ளனர். இந்த நிலையில், திருமணத்திற்கு மறுநாளே மணிமேகலை, கணவரிடம் தனது காதல் விவகாரத்தை கூறி, தன்னை காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டு உள்ளார்.

திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை… காதல் தோல்வியால் விபரீத முடிவு!

ஆனால், அதற்கு ஆறுமுகம் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மணிமேகலை நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறைக்கதவு நீண்ட நேரம் திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது, மணிமேகலை தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு, அவரது பெற்றோர், உறவினரகள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.