திருமணமான 8 நாட்களில் இளம்பெண் தற்கொலை!

 

திருமணமான 8 நாட்களில் இளம்பெண் தற்கொலை!

திருமணமான 8 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 8 நாட்களில் இளம்பெண் தற்கொலை!

தருமபுரி அடுத்த சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். 19 வயதான இவரது மகள் பவித்ரா டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். இதையடுத்து இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.இதை தொடர்ந்து தருமபுரி அடுத்த குப்பூரைச்சேர்ந்த சுப்பிரமணி மகன் வேல்முருகன் என்பவருக்கும் பவித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வேல்முருகன் மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி இருவீட்டார் முன்னிலையில் வேல்முருகன் – பவித்ரா திருமணம் நடந்துள்ளது. பின்னர் பவித்ரா கணவன் வீட்டுக்கு வந்துள்ளார்.

திருமணமான 8 நாட்களில் இளம்பெண் தற்கொலை!

இந்நிலையில் கணவன் வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட வீட்டில் யாரும் இல்லாதபோது பவித்ரா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 8 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.