சங்கரன்கோவில் அருகே தந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை!

 

சங்கரன்கோவில் அருகே தந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே தந்தை இறந்த வேதனையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் மகேஸ்வரி (26). இவர் அரசு பணிக்கு செல்வதற்காக பயிற்சி வகுப்பு சென்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவேல் உடல்நல குறைவினால் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து, மகேஸ்வரியை அவரது தாயார் மாரியம்மாள் கவனித்து வந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே தந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை!

தந்தை இறந்த நிலையில், தாயாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.