கல்லூரியில் சேர முடியாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை!

 

கல்லூரியில் சேர முடியாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே கல்லூரியில் சேர முடியாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்துள்ள வள்ளவிளை கலிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் குமார். மரம் ஏறும் தொழிலாளி. இவரது மகள் நந்தினி (19). இவர் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்தார். மேலும், கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பியுள்ளார். ஆனால், வறுமை காரணமாக சில மாதங்கள் கழித்து கல்லூரியில் சேர்ப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக நந்தினி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

கல்லூரியில் சேர முடியாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை!

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது, வீட்டிற்கு வந்த குமார் மகள் தூக்கில், தொங்குவதை அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நந்தினியை மீட்டு பாறசாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.