குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

தூத்துக்குடி

கோயில்பட்டியில் குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி லாயல்மில் காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முத்துராம லிங்கம்(34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. தம்பதியினர் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் மற்றும் மகாலட்சுமி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இதில் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும், அவரை காப்பற்ற முயற்சித்த முத்துராமலிங்கமும் தீக்காயம் அடைந்தார். தம்பதியினர் இருவரையும் உறவினர்கள் மீட்டு கோயில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, இருவரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று மகாலெட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோயில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.