அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

 

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

காஞ்சிபுரம்

ஒரகடம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் தினேஷ் (38). இவருக்கு திருமணமாகி இலக்கியா (33) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். தினேஷ், காஞ்சீபுரம் மாவட்டம் மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடெடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் தினேஷ் – இலக்கியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த இலக்கியா திடீரென குடியிருப்பின் 4-வது தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஓரகடம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.